To Read this Recipe in English, Click Here
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் - (4-5)
- தக்காளி - (1-2)
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- கறிவேப்பிலை - 1
- பச்சை மிளகாய் - 1
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (தேவைப்பட்டால் )
- பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
- கடலை மாவு - 2 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- உப்பு - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - 3 மேஜை கரண்டி
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவோடு தண்ணீரை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். தனியே எடுத்துவைக்கவும்.
- வாணலியில் எண்ணெய்யை காயவிடவும்.
- கடுகு , உளுத்தம் பருப்பு, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும்.
- வெங்காயம் வதங்கியயுடன் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பை சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
- மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தை சேர்க்கவும்.
- தண்ணிரில் கரைத்து வைத்த கடலை மாவை சேர்க்கவும். சிறு தீயில் 5 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
- நறுக்கிய கொத்துமல்லி இலைகளை கொண்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
To Read this Recipe in English, Click Here
குறிப்பு
- உப்பு மற்றும் காரத்தை விருப்பத்திற்கு ஏற்றவாரு மாற்றிக்கொள்ளலாம்.
- இந்த சட்னி ஆறியதும் கெட்டியாகிவிடும். எனவே, கடலை மாவை கரைக்கும் பொது போதிய அளவு தண்ணீரை ஊற்றவும்
- இல்லையேனில், பரிமாறும் முன் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.
No comments:
Post a Comment